Saturday, December 31, 2011

முதலியார் பெரியவர்


"முதலியார் பையனா  நீ " இதை சொல்லியபோது அவருக்கிருந்த   முகபாவம் பொடியனாக  இருந்த என் நினைவிலிருக்கிறது.இன்றும். ஆச்சரியமா? இல்லை கோபமா?இல்லை ஏளனமா? இல்லை  கண்டிப்பா இல்லை? ஆனால் நானேதோ சின்ன தப்பு மட்டும் செஞ்சுட்டேன்னு  அந்த"சற்றே முழித்த": பார்வை எனக்கு புரிய வச்சுடுச்சி.
   மாட்டு பொங்கலுக்கு சரணம் செய்ய சென்றிருந்த கும்பலின் இடையே இருந்த என்னிடம் தினாமூனா மாமா கேட்ட கேள்வி இது. "பையா யாரு?" என்ற அவரின் கேள்விக்கானபதில் "முத்து முதலியார் "-பையன் இதில் முதலியாரை தவிர்த்திருக்கவேண்டும் ,(கொல்லன் தெருவில் ஊசி) "நாவம்மா பையன்" என என் பதில் இருந்திருக்கவேண்டும்.       எங்க அப்பா இவரை உறவு முறையில் குறிப்பதைவிட  "எங்க மேனேஜர்"-  னே எப்போதும் சொல்லுவார் .மதுரை கடையில்  அவரிடம் பெற்ற அநுபவம் .லீவு வாங்க சிறமப்படுவது. தாத்தா போட்டோவை வண்ணமயமாக்க சற்று கூடுதலாக செலவு செய்து  கண்டிகப்பட்டது. பிறகு அவரே  "மாமா படத்தவச்சுட்டு போ நான் ஜாக்ரதயா ரயில்ல எடுத்து வந்து ஊரில் கொடுக்கிறேன்" என்றது போன்ற செய்திகள் கூறிஇருக்கிறார்.                                                                            
           அண்மையில்  மஞ்சையில் சஷ்டிமுடிந்து  வேல் பூசைஇடும்பன்பூசைஇவற்றில்கலந்துகொண்டவர்களுக்கு (ஏன் விழா முழுவதுமே)தெறிந்திருக்கும் அங்கு  நிலவும் ஒரு துரிதகதியிலான செயல்பாடுகள். எங்கள் வீட்டில் வேல் பூசை நடந்தபோது  இவர்தான் சர்வசாதகம் அல்லது தலமை பூசகர்  தொடங்கியது பூசை படையல்கள் நடந்தன,விருத்த கோஷங்கள் ஒலித்துமுடிந்தன, பூமாலைகள் சாத்தப்பட்டு தூபதீபங்கள் காட்டப்பட்டவுடன் தொடங்கியது இவரது நீண்ட பாமாலை  நேரம் துள்ளியமாக நினைவிலில்லை(பழைய பாணியில் சொல்வதானால் ஒருc-90யை தொடும் ,தற்போதய ப்பார்மெட்டில் mp3ல் 47-50மmpபிடிக்கும்) அதுவும் (பா)மாலை வேறு கரவாரம் இல்லை இங்கு  தொடங்கி அங்கு முடிய  மேலும் ஒரு சுற்று வருவதற்கான வாய்ப்பு இருந்தது அதுவும் நடந்தது .சிலர் விரைவுபடுத்த நினைத்திருக்ககூடும் . தற்போது உள்ள நிலமைபோல் இல்லாவிட்டாலும் அன்றும் துரிதமாக நடக்கவேண்டியதற்க்கான காரணங்கள் இருக்கத்தான் செய்தன.(வெளியூர் செல்பவர்கள்,ராகு காலம் etc)  ஆனால் நாம்  நினைத்தாலும் அவரிடத்திலொன்றும் செல்லாது . அந்த தருணம் அவர் ஒருவரின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது.அது தான் பெரியவர். இந்த தாமதத்தினால்  யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெறியவில்லை.
இன்றும் இதைப்போன்றதொரு சமுதாய நடைமுறை (அடர்த்தி சற்று தளர்ந்தாலும்) நிலவியே வருகிறது மஞ்சையில் ஏன் 18 கிராமத்திலும். மேலும் தளர்வு ஏற்பட்டுவிடுமோ என்ற  நம் போன்றோரின் அச்சம் தேவையற்றதாக வேண்டும் என்பதாலும்
                    தி.மு வின் சாதனைகளை ஆளுமையை மற்றபெரியவர்கள் இன்னுமதிகமாகவும் சிறப்பாகவும் சொல்லமுடியும்.(அல்லது நம் போன்றவர்கள் திரட்டிக்கொடுக்க முடியும்) என்றாலும்  அதற்கிடைப்பட்ட கால இடை வெளியில் ஏதோ இவர்படத்தை கண்டவுடன் இணயத்தில் இணைந்துள்ள இளவர்கள்( நம்மை விட!!!!) இதைப்போன்ற சமுதயநடைமுறை பற்றிய ஆர்வம் இருந்தும் அநுபவம்  பெற வாய்ப்பில்லாமல் சிலராவது வெளியே   இருக்கக்கூடும் அதற்காகவே அவர்களுக்காகவே தாண்டிவிட்டேன்(முந்திக்கொண்டேன்)
                          இது என்னது.,.
               அவர் பக்கத்துவீட்டு தம்பி மகனுக்கு ஏற்பட்டதாக (இராம.ச.அரு)சொல்லக்கேட்டது. சஷ்டியின் போது ஊரில் தேர் இன்னும் கொஞ்ச நேரத்தில் புறப்படப்போகிறது இவர் வீட்டை விட்டு வெளியே வந்து வீதியில்  நிற்கிறார் பக்கத்தில் இருந்த நம்மவர்  கேட்கிறார்
   கேள்வி:- ஏம்ப்பா மனி  தேர் தெக்கு வீதில வரும்போது சிறமம் ஒன்னும் இருக்காதே தின்னயசாமி மடத்துக்கிட்ட பூங்குலத்துல அருத்துஓடிக்கிடக்குமே மொடசபுடிச்சி இருக்கா? மண்ணுகொட்டியிருக்கா?                                                                              போய் பாத்துட்டு வந்துடுரேன். அல்லது இப்பத்தான் ஊரிலிருந்து வந்தேன்  எனக்கு தெறியலையே (உண்மையும் அதான்)  என பதில் இருக்கவேண்டும்
ஆனால்...
 பதில்:-   செஞ்சிருப்பாங்கண்ணு  நினைக்கிறேன்.
 பதிலுக்கு நம்மவரின் எதிர் வினை:-- "ஓகோ"     நெனக்கிறீங்களோ!!!.
                 யார் பெரியவர்? இவர் தான்.
                       தி.முத்துக்குமரசாமி முதலியார்.
                                          மஞ்சக்கொல்லை